2 அரசர்கள்![]()
2 அரசர்கள் (2 Kings) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதற்கு முன்னால் அமைந்த 1 அரசர்கள் இந்நூல் கூறும் வரலாற்றிற்கு முந்திய காலக் கட்டத்தை விரித்துரைக்கிறது.[1] நூல் பெயர்"2 அரசர்கள்" என்னும் இத்திருநூல் "வடக்கு - தெற்கு" என்று பிளவுண்ட யூதா - இசுரயேல் அரசுகளின் வரலாற்றை "1 அரசர்கள்" விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல்கள் "Sefer melakhim" (= அரசர்கள் பற்றிய நூல்கள்) என அறியப்படுகின்றன. கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை யூதா-இசுரயேல் நாடுகளில் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக அவற்றை ஆண்ட அரசர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதால் இந்நூல்கள் இப்பெயர் பெற்றன.[2][3] நூலின் மையக் கருத்துகள்'2 அரசர்கள்' என்னும் இத்திருநூல் இரு பகுதிகளைக் கொண்டது:
இந்நூல் யோயாக்கின் அரசனது விடுதலையுடன் முடிகிறது. யூதா, இசுரயேல் ஆகியவற்றின் அரசர்களும் மக்களும் ஆண்டவருக்கு அஞ்சி நடக்காததாலேயே அந்நாடுகள் பேரழிவுக்குள்ளாயின என்பதை இந்நூல் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறது. எருசலேம் வீழ்ச்சியுற்றதும், யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதும் இசுரயேலரின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன. இந்நூலில் எலியாவின் பதிலாளான இறைவாக்கினர் எலிசாவின் புதுமைகள் சிறப்பிடம் பெறுகின்றன. 2 அரசர்கள் நூலின் உள்ளடக்கம்
மேலும் காண்கவிக்கிமூலத்தில் அரசர்கள் - இரண்டாம் நூல் மேற்கோள்கள்
Information related to 2 அரசர்கள் |
Portal di Ensiklopedia Dunia