சேலம் மாநகராட்சி (Salem City Municipal Corporation) இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும். இது, தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்பின்படி, ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய நகரங்களுக்கு அடுத்த ஐந்தாவது பெரிய மாநகராட்சி ஆகும். இம்மாநகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சியாக செயல்படுகின்றது. சேலம் நகராட்சி 1966ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களையும் அறுபது (60) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 312 கோடி ரூபாய் ஆகும்.
01.04.1979 முதல் சூரமங்கலம் நகராட்சி, ஜாரிகொண்டாலம்பட்டி, கன்னங்குறிச்சி பேரூராட்சிகளும் மற்றும் 21 கிராம ஊராட்சிகளும் இணைத்து. இதன் பரப்புளவு 93.34 ச.கி.மீ. கொண்டதாக விரிவுப்படுத்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,032,336 ஆகும்.